சிங்கப்பூர் வந்த ஸ்கூட் விமானத்தில் பயணிகளிடமிருந்து சுமார் S$31,000 தொகையை வெளிநாட்டு பயணி ஒருவர் திருடியதாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் (டிச.16) ஸ்கூட் TR305 விமானத்தில் பயணித்த போது அவர் மூன்று பேரிடம் திருடியதாக கூறப்படுகிறது.
வியட்நாமில் இருந்து சிங்கப்பூர் வந்த விமானத்தில் Zhang Xiuqiang என்ற 52 வயதான சீன நாட்டவர் இந்த குற்றத்தை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
விமானம், ஹோ சி மின் நகரில் இருந்து சாங்கி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.
அவர் விசாரணைக்காக வேண்டி தடுப்பு காவலில் (ரிமாண்ட்) வைக்கப்பட்டுள்ளார்.
வரும் டிசம்பர் 22 அன்று ஆடவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்.
திருட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்றாண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்