கத்தியுடன் போலீசாரை நோக்கி ஓடிவந்த ஆடவர்… சுட்டுப்பிடித்த போலீஸ் – திக் திக் வீடியோ!

clementi-shot-fired-man-police

கிளெமெண்டி அவென்யூ 5ல் உள்ள க்ளெமெண்டி அக்கம்பக்கக் காவல் நிலையத்திற்கு வெளியே கையில் கத்தியுடன் இருந்த ஆடவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக எல்லாப்பக்கமும் பரவலாக பரவி வருகிறது.

சிங்கப்பூரில் நாளை முதல் இவர்களுக்கெல்லாம் வழக்கமான பரிசோதனை இல்லை..!

கையில் கத்தியைப் ஏந்திக்கொண்டு ஒரு மனிதன் தெருவைக் கடப்பதை அந்த வீடியோவில் காண முடிந்தது.

அதனை அடுத்து, அவர் ஒரு அதிகாரியை நோக்கி ஓடுவதையும், அதனால் அவர் துப்பாக்கியால் அந்த நபரை சுடுவதையும் காண முடிகிறது.

அதன் பின்னர் அந்த ஆடவர் உடனே தரையில் விழுந்தார். இதையடுத்து அந்த நபரை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

இந்நிலையில், 49 வயதுமிக்க அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

41 வயதுமிக்க மற்றொரு ஆடவரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது, இதனால் வலது கை மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு, சுயநினைவுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசை சந்திப்பதற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதில், 49 வயதுடைய அந்த ஆடவரின் இடது கையில் துப்பாக்கிச் சூட்டு காரணமாக காயம் ஏற்பட்டது.

SGD 1000 பணநோட்டை திருப்பி பார்த்தால் இப்படியொரு ஆச்சர்யம் இருக்கா? இன்னும் சிங்கப்பூர் மக்கள் பலருக்கே இது தெரியாது!