பாஸ்போர்ட்டை பரிசீலிக்க வரிசையில் நின்ற வெளிநாட்டு ஆடவர்… சுருண்டு விழுந்து திடீர் மரணம்

Man collapses dies while queuing Immigration

தனது பாஸ்போர்ட்டை பரிசீலிப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த ஆடவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

அவர் 59 வயதான மலேசியர் என்றும், இந்த சம்பவம் நேற்று ஆகஸ்ட் 7, திங்கட்கிழமை காலை நடந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியரை இன ரீதியாக கொச்சைப்படுத்தி, எட்டி உதைத்த சிங்கப்பூர் ஆடவருக்கு சிறை

மலேசியாவில் ஜொகூர் பாரு சோதனைச் சாவடியில் வரிசையில் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சின் செவ் டெய்லியின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தை திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.

சுல்தான் இஸ்கந்தர் சிஐக்யூ வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததை அடுத்து, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அன்று காலை 10:25 மணியளவில் நடந்ததாக ஜோகூர் போலீசார் உறுதிப்படுத்தினர். அதன் காட்சிகள் இணையத்தில் பரவியது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

Toto National Day Draw: வெறும் S$1 க்கு டிக்கெட் வாங்கி S$2.4 மில்லியன் பரிசைத் தட்டிச்சென்ற அதிஷ்டசாலி