சிங்கப்பூரில் ஆகஸ்ட் 4 அன்று நடந்த டோட்டோ தேசிய தின சிறப்பு டிராவின் பிரம்மாண்ட இறுதிப் பரிசு தொகை 3 வழிகளில் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் இறுதி பரிசுத் தொகை கிட்டத்தட்ட S$7.3 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் ஒருவரை காணவில்லை – பொங்கோல் நீரில் மூழ்கினாரா.. தொடரும் தேடுதல் வேட்டை
கடந்த ஜூலை 31ம் தேதி நடந்த டிராவில், முதல் பரிசுக்கான வெற்றியாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் பரிசுத் தொகை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது.
வெற்றி பெற்ற 3 டிக்கெட்டுகளுக்கும் தலா S$2.4 மில்லியன் தொகை சமமாக பிரித்து கொடுக்கப்படுகிறது.
வெற்றி பெற்ற 3 டிக்கெட்டுகள்:
- System 12 Entry கட்டணம் – S$924
- Ordinary entry கட்டணம் – வெறும் S$1
- System 9 entry கட்டணம் – S$84
இதில் ஒரு வெற்றியாளர் மட்டும் வெறும் S$1 செலவழித்து சுமார் S$2,432,087 பரிசுத் தொகையை தட்டிச்சென்றார்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்