ஆடவர் ஒருவரை காணவில்லை – பொங்கோல் நீரில் மூழ்கினாரா.. தொடரும் தேடுதல் வேட்டை

punggol-coast-man-missing
Google Maps street view

பொங்கோல் நீரில் ஆடவர் ஒருவர் நேற்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மூழ்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.

அவரை தேடும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக கடன் கொடுத்ததாக சிக்கிய 174 பேர்

ஆக. 6 ஆம் தேதி மாலை 3:45 மணியளவில் பொங்கோல் ஜெட்டிக்கு அருகில் 35 வயது நபர் ஒருவரைக் காணவில்லை என உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) கூறியது.

அவரை தேடும் நடவடிக்கையில் சிங்கப்பூர் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையம் (MPA), SPF மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஆகியவை ஈடுபட்டுள்ளன.

மாலை 4 மணியளவில், அங்கு ஏராளமான போலீசார் மற்றும் SCDF வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக Lianhe Zaobao கூறியுள்ளது.

நார்த்ஷோர் பிளாசா பார்க் கனெக்டரில் இருந்து பொங்கோல் செட்டில்மென்ட் வரையிலான பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டடு போலீசார் கட்டுப்பாட்டில் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் நாடுகள் – சிங்கப்பூர் உட்பட 10 நாடுகள் லிஸ்ட்