பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் 26 வயது ஆடவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
உளு பாண்டன் பார்க் கனெக்டரில் இரண்டு பெண்களிடம் தனது பிறப்புறுப்பை காட்டியதாக கூறப்படும் ஆடவர் குறித்து சில புகார்கள் கிடைத்ததாக செய்தி வெளியீட்டில் போலீஸ் தெரிவித்துள்ளது.
குறுகிய சாலையில் நுழைந்த கனரக லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி
இந்த சம்பவம் கடந்த டிச. 29, 2021 அன்று இரவு 11:15 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தரை விசாரணைகள் மூலமாகவும், CCTV கேமராக்களின் உதவியுடனும், கிளெமென்டி போலீஸ் பிரிவின் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து, அந்த ஆடவர் நேற்று முன்தினம் ஜனவரி 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
இதுபோன்ற பாலியல் குற்றத்திற்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.