தோவா பயோ லொராங் 1இல் (Toa Payoh Lorong 1) உள்ள பிளாக் 100 இன் கீழே நேற்று செப்டம்பர் 30ஆம் தேதி காலை 6:47 மணியளவில் 58 வயதான ஒருவர் அசைவில்லாமல் கிடந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 6ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை..!
அதாவது, அங்கு ஐந்தாவது மாடியில் உள்ள பிளாட்டின் ஜன்னலிலிருந்து ஒருவர் கீழே விழுந்த பயங்கரமான காட்சியைக் கண்டதாக Shin Min Daily News க்கு கண்ணால் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
ஒருவர் கீழே விழுந்த பயங்கரமான காட்சியை கண்ணால் கண்ட அந்த நபர், பயந்து வீட்டிற்கு ஓடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, 58 வயதான அவர் இறந்துவிட்டதாக துணை மருத்துவர்களால் உறுதிப்படுத்தியாக காவல்துறை தெரிவித்தது.
மேலும் இயற்கைக்கு மாறான இந்த மரணம் தற்போது விசாரணையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்னொரு சம்பவம், அதே நாளில் காலை 6:43 மணியளவில் 24 வயது பெண் ஒருவர், அங்கிருந்து சுமார் 700மீ தொலைவில் உள்ள பிளாக் 81A தோவா பயோ லொராங் 4இன் ஆறாவது மாடியின் விளிம்பில் கண்டுபிடிக்கப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பெண் மனநலம் (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) சட்டத்தின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார், பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இதையும் படிங்க : குறிப்பிட்ட இரு நாடுகளை சேர்ந்த பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி..!