சிங்கப்பூரிலிருந்து 6ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இந்த புதுப்பிப்பு அட்டவணையில், தமிழகத்தின் திருச்சிராப்பள்ளிக்கு அதிக விமானங்கள் செல்லவிருக்கின்றன. மேலும், சென்னையும், மதுரையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க : குறிப்பிட்ட இரு நாடுகளை சேர்ந்த பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி..!
விமான முன்பதிவுகளை, ஏர் இந்தியா வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் செய்யலாம் என்றும் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
#VandeBharatMission REVISED Phase 6 Schedule of flights from Singapore as of 30/09/2020
All flights available for Online Booking directly from Air India website!!
Please check for updates https://t.co/Kfxc8uzuaI
NEW RELEVANT GUIDELINES https://t.co/3F3er3m9Rl pic.twitter.com/GS0TKcufTh
— India in Singapore (@IndiainSingapor) September 30, 2020
அதே போல, தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அக்டோபர் மாதம் முதல் இயக்கப்படும் விமானங்களின் பட்டியலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானங்களை அறிவித்துள்ளது.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள இந்த விமானங்களில், தமிழகத்திற்கு அதிக அளவிலான விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான விமானங்கள் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன.
முக்கிய குறிப்பாக, இந்த விமானங்களில் சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் பயணிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விமானம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் டெலிகிராம் உடன் இணைப்பில் இருங்கள்.
இதையும் படிங்க : குறைந்த கூட்ட நெரிசல் மற்றும் தூய்மை – பயணிகள் மனநிறைவு..!