சுங்கே உலு பாண்டன் கால்வாயில் மிதந்த சடலம் – யார் அவர்?

man-85-floating-clementi-canal
Google Maps street view

சுங்கே உலு பாண்டன் கால்வாயில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) காலை, 85 வயது முதியவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கிளமென்டி அவென்யூ 6க்கு அருகில் உள்ள கால்வாயில் சடலம் மிதந்ததாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஜன.,2 முதல் புதிய திருத்த சட்டம்.. மீறினால் S$10,000 வரை அபராதம்

இந்த சம்பவம் டிச. 31 அன்று காலை 11 மணியளவில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த 85 வயது முதியவரின் சடலம் தண்ணீரில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டதாகவும், அவர் இறந்ததை மருத்துவ பணியாளர்கள் உறுதி செய்ததாக போலீசார் கூறினர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, இதில் சதிச்செயல் ஏதும் நடந்ததாக போலீசார் சந்தேகிக்கவில்லை.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் 88% வரை தள்ளுபடி விற்பனை.. மெத்தை, சோபா உட்பட 1000 பொருட்கள் – சிறப்பு பரிசுகளும் உண்டு