50 வயது மதிக்கத்தக்க ஆடவரின் சடலம் கண்டெடுப்பு.. மர்டர் என போலீஸ் சந்தேகம்

Man found dead bukit-merah
Google Maps & Shin Min Daily News

புக்கிட் மேரா வியூவில் உள்ள வீடு ஒன்றில் இன்று (நவ.4) 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் இறந்து கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிங்கப்பூர் போலீசார் (SPF) சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு இவ்வளவு தான் வேகம்.. வந்தது புதிய கட்டுப்பாடு

இந்த சம்பவம் பிளாக் 117 புக்கிட் மேரா வியூவில் அமைந்துள்ள வீட்டில் நடந்ததாகவும், அங்கு சடலம் கண்டெடுக்கப்பட்டகாகவும் ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

மேலும் இந்த மரணம், நேற்று நவம்பர் 4 ஆம் தேதி காலை 10 மணியளவில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

போலீசார் சம்பவ இடத்தை சுற்றி உள்ளதாகவும், விசாரணை செய்வதாகவும் ஷின் மின் கூறியுள்ளது.

விசாரணை தொடர்கிறது.

சிங்கப்பூரில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சிக்கிய 2 வெளிநாட்டு இளைஞர்கள்