சாங்கி க்ரீக் நீரில் ஆடவர் ஒருவரின் உடல் மிதந்த நிலையில் நேற்று ஜூலை 31, அன்று கண்டெடுக்கப்பட்டது.
அன்று மதியம் 1:40 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல் படை (SPF) மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் வந்ததாக கூறப்பட்டுள்ளது.
துவாஸ் கட்டுமான தளத்தில் வெளிநாட்டு ஊழியர் மரணம் – மயக்க நிலையில் கிடந்தவர் மரணித்த சோகம்
அவருக்கு வயது 35 இருக்கும் என்றும், மீட்கப்பட்ட உடலை சோதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சதி செயல் ஏதும் நடந்ததாக அது சந்தேகிக்கவில்லை.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
வேலை தேடும்போதும், வேலையிடத்திலும் காட்டப்படும் பாகுபாடு – சிங்கப்பூரில் குறைவாக பதிவு