தனது மனைவியின் சகோதரிக்கு பாலியல் ரீதியாக பல குறுஞ்செய்திகளை அனுப்பிய ஆடவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண்ணை தனது வாடகை வீட்டிற்கு வரவைத்து நாசம் செய்துள்ளார்.
பெண் தன் சொந்த வீட்டிற்குச் சென்றபோதும் கூட விடாமல் துரத்தி குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்புவதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
அதோடு விடாமல் பெண் குளித்துக்கொண்டிருக்கும்போது வீடியோ கால் செய்ய சொல்லியும், அவரின் நிர்வாண புகைப்படங்களை கேட்டும் தொந்தரவு செய்துள்ளார்.
அதனை அடுத்து, சில மாதங்களுக்குப் பிறகுதான் அவரது இந்த மோசமான செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன் பின்னர் இது பற்றி போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டது.
நேற்று செவ்வாயன்று (ஏப்ரல் 12), 26 வயதான சிங்கப்பூர் ஆடவருக்கு உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை உட்பட இதே போன்ற மற்ற ஒன்பது குற்றச்சாட்டுகள் தண்டனைக்காக பரிசீலிக்கப்பட்டது.
MRT ரயிலில் பெண்ணிடம் தவறாக நடந்து, தன் பிறப்புறுப்பை காட்டிய வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, அபராதம்