ரகசிய கேமரா பொருத்தப்பட்ட பவர் பேங்கைப் பயன்படுத்தி ஆடவர் ஒருவர் பலே வேலையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் சுமார் 76 பெண்களை அவர் ரகசியமாக படம்பிடித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
ஜோஹன் விஜயா என்ற அந்த ஆடவரின் நடத்தை கடந்த ஆண்டு தான் தெரியவந்தது, அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு போலீசில் புகார் அளித்தபோது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரக் குடியிருப்பாளரான அவர், தனக்கு சொந்தமான லேப்டாப் மற்றும் ஹார்ட் டிரைவில் மொத்தம் 391 ஆபாச வீடியோக்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் 336 வீடியோக்கள் பெண்களிடம் ரகசியமாக எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
குளிக்கும்போது அல்லது கழிப்பறையைப் பயன்படுத்தும் போது, அவர் ரகசிய கேமரா அடங்கிய பவர் பேங்கை இயக்கியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
ஓட்டுனர்களுக்கு சம்பளம் உயர்வு – S$2,200 to S$3,200… ஜூலை முதல் அமல்