பாலியல் உறவில் அதிருப்தி அடைந்த ஆடவர் ஒருவர் பெண்ணை தாக்கியதற்காக ஆறு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
28 வயதுமிக்க கோ ஜுன் லியாங் என்ற அந்த ஆடவர் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மலேசியாவைச் சேர்ந்த கோ ஒரு மருந்து நிறுவனத்தில் பொட்டலம் போடுபவராக பணிபுரிந்தார் என்று நீதிமன்றம் விசாரித்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி, பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்தும் இணையதளத்தில் கோ அந்த பெண்ணின் விவரத்தைக் கண்டுபிடித்தார்.
கோ பின்னர் பெண்ணின் இல்லத்தில் சந்திக்க ஏற்பாடு செய்தார், இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்.
இரண்டாவது முறை உறவில் ஈடுபட கோவிற்கு திருப்தி இல்லாமல் வலி ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
“கொடுத்த பணத்துக்கு இது ஒர்த் இல்லை” என்று பணத்தை கேட்டு கோ அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.
முழு பணத்தையும் அந்த பெண் தருகிறேன் என சொல்லியும் கோ அவரை தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்