3 மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவருக்கு சிறை

3 மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவருக்கு சிறை
Representational Image (Photo: iStock)

மூன்று மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக 69 வயது முதியவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கன் ஹீ சிட் என்ற அவர் இரண்டு அநாகரீகமான செயலுக்கான இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மேலும், சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

கூடுதலாக இரண்டு குற்றச்சாட்டுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன

பாலியல் குற்றங்களுக்காக கன் தண்டிக்கப்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு 2022 ஜனவரியில், பேருந்து நிறுத்தத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவர் குறைந்தது 5 பேருக்கு தனது அந்தரங்க உறுப்புகளை காட்டியதாக அவருக்கு 12 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கட்டுமான மேலாளர் இறுதிச்சடங்கில் குவிந்த ஊழியர்கள் – கண்ணீர் மல்க பிரியாவிடை