“உயிர் போனா திரும்பி வருமா?” – மனைவியுடன் சண்டை… கோபத்தில் காரில் இருந்து குதித்த கணவன்!

man-jump-car-argue-with-wife

தமது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர், அதன் பிறகு ஓடும் காரிலிருந்து கீழே குதித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

டாங்லின் பகுதியில் நேற்று முன்தினம் ஜூலை 23, சனிக்கிழமை அன்று அவர் ​​ஓடும் காரில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் 15 வயது சிறுமியை 12 நாட்களாக காணவில்லை; உதவுங்கள் வாசகர்களே!

சனிக்கிழமை காலை 8.55 மணியளவில் குலுனி சாலையில் இருந்து உதவி வேண்டி அழைப்பு வந்ததை சிங்கப்பூர் போலீஸ் படை உறுதிப்படுத்தியதாகவும் ஏசியாஒன் செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னர், 28 வயதுடைய ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது அவர் மனநல பராமரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அவருடைய மனநலத்தை மதிப்பீடு செய்ய மனநல அமைப்புக்கு அவர் அனுப்பப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

சிங்கப்பூரில் 10 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி!