மறைந்த தாத்தாவின் நினைவாக வைத்திருந்த செயினை தொலைத்த ஊழியர் – கவலையுடன் தேடல்

Man looking for necklace
Stomp

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் தனது மறைந்த தாத்தாவின் நினைவாக வைத்திருந்த நெக்லஸ் செயினை தொலைத்து அதனை தேடி வருகிறார்.

அவர் கடந்த வியாழன் (மார்ச் 10) அன்று மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது நெக்லஸ் தொலைந்து போனதாக தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த ஊழியர்… திருச்சி விமான நிலையத்தில் கைது – போலீசில் ஒப்படைப்பு

அதாவது அவர் காலை 8.10 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் இரவு 8.40 மணியளவில் தனது வேலை இடத்தில் இருக்கும்போது நகையை காணவில்லை என்பதை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

அவர் கடந்து சென்ற வழியை பகிர்ந்து கொண்டுள்ளார்:

அவர் ரேஸ் கோர்ஸ் சாலை, செராங்கூன் சாலை, Jln Toa Payoh, PIE, பாயா லெபார் சாலை, Ubi Ave 3, Ubi Ave 4 ஆகிய இடங்களை அவர் சென்றதாக கூறியுள்ளார்.

நெக்லஸ் அவரின் தாத்தாவின் அன்பு பரிசு என்றும், அது தாத்தாவுக்கு சொந்தமானது என்றும், எனவே அது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாரும் அதை கண்டறிந்தால் இந்த 9384 3761 எண்ணை தொடர்பு கொண்டு கொடுக்கலாம் என ஸ்டாம்ப் தெரிவித்துள்ளது.

பெண்ணை சீரழித்து, அடித்து தாக்கி சாலையில் போட்டுச்சென்ற இரு வெளிநாட்டு ஊழியர்கள் – நீதிமன்றத்தில் ஆஜர்