சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த ஊழியர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை (மார்ச் 09) கைது செய்யப்பட்டார்.
கடந்த மார்ச் 09 அன்று சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ரபூர் ரகுமான் (52) என்பவருக்கு வழக்கு நிலுவையில் இருந்துள்ளது, இதனை அடுத்து அவர் அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
அவரின் ஆவணங்களை சோதனையிட்டபோது, அசாம் மாநிலம் கவுகாத்தி காவல் நிலையத்தில் அவரின் மீது வழக்கு இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
பின்னர் அவர் அசாம் மாநில காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதேபோல திருச்சியில் இருந்து UAE செல்ல இருந்த சென்னை போரூா் பகுதியைச் சோ்ந்த ஒருவரும் இதில் பிடிபட்டார்.
அவர் மீது சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவாகியிருப்பதாக தெரியவந்தது.
பின்னர் அவரும் உரிய காவல்நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் கனிவான கவனத்திற்கு…இனிமேல் இந்த நடைமுறை இல்லை.!