சிங்கப்பூரில் 56 வயதுடைய ஆடவரை அக்டோபர் 12ஆம் தேதி முதல் காணவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அங் மோ கியோவில் கடைசியாகக் காணப்பட்ட 56 வயதுடைய நபர் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுகொடுள்ளனர்.
திரு ஜமாலுதீன் பின் முகமது ஆரிஃபீன் கடைசியாக அக்டோபர் 12 ஆம் தேதி இரவு 10 மணியளவில், பிளாக் 318 ஆங் மோ கியோ அவென்யூ 1க்கு அருகில் காணப்பட்டார்.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கவும்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் கடும் வெள்ளத்தால் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – மீண்டும் கனமழை எச்சரிக்கை