பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக 29 வயதுடைய ஆடவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செய்தி வெளியீட்டின்படி, வாம்போவாவில் (Whampoa) உள்ள பிளாக் 116B ஜலான் டென்டெராமில் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரால் 26 வயது பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கடந்த ஆக. 7 அன்று புகார் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
“ஃபைசர்-பயோன்டெக்” தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்பதிவு இன்று முதல் (ஆக.10) தேவையில்லை!
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், போலீஸ் கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களின் உதவியுடன், டாங்ளின் போலீஸ் பிரிவின் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து, கடந்த திங்கள்கிழமை (ஆக. 9) கைது செய்தனர்.
மேலும், அந்த ஆடவர் மீது ஆகஸ்ட் 10 இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம், பிரம்படி விதிக்கப்படலாம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்கள் உணவு மற்றும் பான நிலையங்களில் அமர்ந்து சாப்பிடலாமா?