தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்கள் உணவு மற்றும் பான நிலையங்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று (ஆகஸ்ட் 10) தெரிவித்துள்ளது.
அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சோதனை முடிவுகளை வழங்கும் இடங்களில் இருந்து, நிகழ்ச்சிக்கு முந்தைய COVID-19 முடிவுகளை வைத்திருக்க வேண்டும் என்றும் MOH கூறியுள்ளது.
சிங்கப்பூர் எல்லா சவால்களையும் ஒற்றுமையாக நின்று எதிர்கொள்ளும் – பிரதமர் திரு லீ நம்பிக்கை!
இந்த தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றால், 13 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் மட்டுமே ஹாக்கர் நிலையங்கள் மற்றும் காபி கடைகளில் உணவருந்த முடியும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 13 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், கடந்த 24 மணி நேரத்தில் செல்லுபடியாகக்கூடிய “நெகடிவ்” ART அல்லது PCR சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும்.
முதலாளிகளால் மேற்பார்வையிடப்படுவது உட்பட, சுயமாக மேற்கொள்ளப்படும் ஆன்டிஜென் விரைவு சோதனைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் MOH கூறியுள்ளது.