ஆடையின்றி, கையில் ஆயுதத்துடன் இருந்த நபர்.. 3 மணிநேரம் போராடி பிடித்த போலீஸ்

man-naked-knife-hougang
Credit: Shin Min Daily News.

ஆடையின்றி, கையில் ஆயுதத்துடன் இருந்த ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜனவரி 20, 2024 அன்று மாலை நடந்த இந்த சம்பவத்தில், சுமார் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பின்னர் 49 வயதான அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்தியருக்கு சிறை, ஆறு பிரம்படிகள்.. சிங்கப்பூரில் இளம் பெண்ணை தூக்கிச்சென்று மானபங்கம் செய்த கொடூரம்

பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் காவல்துறை சொன்னது.

பிளாக் 623 ஹௌகாங் அவென்யூ 8இல் இருந்து அன்றைய தினம் இரவு 8:05 மணிக்கு உதவி வேண்டி காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

Credit: Shin Min Daily News.

அப்பகுதியின் அருகில் உள்ள காபி கடை ஒன்றன் அருகே அவர் கத்தியை வைத்துக் கொண்டு நடமாடுவதை குடியிருப்பாளர் ஒருவர் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அவர் பிளாக் 626 ஹௌகாங் அவென்யூ 2ல் உள்ள அவரின் வீட்டிற்குத் திரும்பினார் எனவும் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகளை தனது பிளாட்டுக்குள் நுழைய அவர் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

Credit: Shin Min Daily News.

சிறிது நேரம் கழித்து கத்தி மற்றும் உணவு பொரிக்க பயன்படும் வாணலியுடன் அவர் சமையலறையின் மேற்கூரை விளிம்பில் ஏறினார்.

3 மணிநேர போராட்டத்திற்கு பின் இறுதியாக அவர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார் என காவல்துறை சொன்னது.