OCBC வங்கியில் மோசடியில் பங்களிப்பை ஒப்புக்கொண்ட முதல் ஆடவருக்கு தண்டனை!

ஓசிபிசி வங்கியில் சுமார் 12.8 மில்லியன் டாலர்கள் மோசடி (படம்: fintechfutures)
Fintechfutures)

OCBC வங்கியில் 12.8 மில்லியன் டாலர்கள் மோசடியில் தான் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட முதல் ஆடவருக்கு சுமார் ஒரு வருட சீர்திருத்தப் பயிற்சி பெற நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

பணமோசடியில் ஈடுபட்ட திரு லியோங் ஜுன் சியான்யை (வயது 21) மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு கடுமையான விதிமுறைகளை பின்பற்ற அவருக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு!

லியோங், வங்கி மோசடி மட்டுமின்றி கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதியில் கலகத்தில் ஈடுபட்டதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

லியோங்கின் இளம் வயதை கருத்தில் கொண்ட மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோ, லியோங்கிற்கு சீர்திருத்தப் பயிற்சிக்கு உட்படுத்த பரிந்துரைந்தார்.

மேலும் மோசடி குற்றம் தொடர்பில் லியோங்குடன் இணைந்து இன்னும் ஆறு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களின் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் முதல் குரங்கம்மை தொற்று.. வெளிநாட்டவருக்கு உறுதி – நெருங்கிய தொடர்புகளுக்கு தனிமை