காதலியுடன் உடலுறவு கொள்ளும் காணொளியை பதிவு செய்த ஆடவர், அவரிடம் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து அந்த காணொளியை பெண்ணின் உறவினரிடம் பகிர்ந்துள்ளார்.
காதலி தன்னைத் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த காணொளியை இணையத்தில் பரப்பி அதனை வைரலாக்குவேன் என்றும் ஆடவர் மிரட்டியுள்ளார்.
31 வயதான வங்காளதேச ஆடவருக்கு கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 9) 12 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த ஜோடி 2018ஆம் ஆண்டு முதல் காதல் உறவில் இருந்துள்ளனர், அவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது அந்த ஆடவர் தனது கைபேசியை பயன்படுத்தி அதனை பதிவு செய்துள்ளார்.
உறவில் பிரச்சனை
இதனை அடுத்து, இந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி, அவர்களுக்குள் பணம் மற்றும் உறவு பிரச்சினைகள் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
பின்னர், செய்தி அனுப்பும் தளமான வாட்ஸ்அப்பில் ஆடவரை அவர் Block செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து, காதலி பாதிக்கப்படுவார் என்று தெரிந்திருந்தும் அவர் அந்த காணொளியை அவரது உறவினருக்கு அனுப்பியுள்ளார்.
போலீஸ் புகார்
பின்னர், இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், சண்டை ஏற்படும் தருணத்தில் முன்னர் எடுக்கப்பட்ட நெருக்கமான காணொளியை ஆயுதமாக்குவது, தோல்வியுற்ற உறவை உயிர்ப்பிக்கும் வழிமுறை என எண்ணுவது மிகவும் தவறானது மற்றும் வக்கிரமானது என்று நீதிபதி கூறினார்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை!