சிங்கப்பூரில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 27 வயதுமிக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாயா லெபார் சாலையில் கடந்த ஜூன் 8 ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து புகார் கிடைத்ததாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதிக்கப்பட்ட நபரின் தங்க நகையை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த நகையின் மதிப்பு S$3,000 ஆகும்.
அதன் பின்னர் அந்த நபரை அடையாளம் கண்ட போலீஸ் அதிகாரிகள், கடந்த ஜூன் 10 அன்று கைது செய்தனர். இரண்டு தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டதுடன், அவரது ஆடைகளும் சான்றாவணமாக கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், இவருக்கு இதோடு மட்டுமல்லாமல் தீவு முழுவதும் மூன்று திருட்டுச் சம்பவங்களில் தொடர்புள்ளது என நம்பப்படுகிறது.
இதுபோன்ற கொள்ளை குற்றத்திற்கு ஒன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.
வீட்டில் சமைத்த உணவை விற்று பல மில்லியன் டாலர் வணிகத்தை ஈட்டிய சிங்கப்பூர் பொறியாளர்கள்