வார் மெமோரியல் பார்க் குளத்தில் ஷர்ப்போர்ட் மூலம் உலாவிய ஆடவர் மீது போலீசில் புகார்

Man surfing War Memorial Park
Photo: Malvin Fang/FB

சிங்கப்பூரில் உள்ள வார் மெமோரியல் பார்க் (War Memorial Park) குளத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 17) ஆடவர் ஒருவர் ஷர்ப்போர்ட் பலகையை கொண்டு நீரில் உலாவிக் கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தை மால்வின் ஃபாங் என்பவர் கண்டதாக மதர்ஷிப் கூறியுள்ளது, அவர் அந்த காணொளியை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 36 பேரிடம் விசாரணை

அன்று இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக ஃபாங் மதர்ஷிப்பிடம் கூறினார்.

அதாவது 20 நிமிட இடைவெளியில், நான்கு முறை அவர் குளத்தில் உலாவ முயன்றதாக ஃபாங் மதர்ஷிப்பிடம் கூறினார்.

புகார் பதிவு

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஃபாங் காவல்துறையிடம் புகார் ஒன்றை பதிவு செய்தார்.

இது தொடர்பாக விசாரிப்பதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.