ஆயுதம் காட்டி போலீசாரை மிரட்டிய ஆடவரை பிடிக்க taser மின் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
61 வயதான ஆடவர் ஒருவர் பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், லோரோங் 1 தோ பாயோவில் உள்ள வீட்டுக்கு அவர் தீ வைக்க முயன்றதாக போலீசாருக்கு புகார் வந்தது.
மேலும், அந்த ஆடவர் கையில் கத்தியுடன் காணப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அதன் பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதும் அதிகாரிகளைப் பார்த்து, அந்த நபர் கத்தியைக் ஏந்தி அவர்களை நோக்கி ஓட்டம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் மின் துப்பாக்கியை பயன்படுத்தியதாக கூறியுள்ளனர்.