தன் காதலிக்கு வேறொருவருடன் திருமணம்: கோபத்தில் செய்த செயல் – இந்தியருக்கு சிறை

சுபாஸ் நாயருக்கு சிறைத்தண்டனை
Pic: File/Today

தனது முன்னாள் காதலி திருமணம் செய்துகொண்டதை அறிந்து கோபமும் பொறாமையும் கொண்ட ஆடவர், காதலியின் வருங்கால கணவர் வசித்த குடியிருப்பின் வெளியே தீ வைத்து மாட்டிக்கொண்டார்.

இந்நிலையில், 30 வயதான சுரேந்திரன் சுகுமாரன் என்ற அந்த ஆடவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பணிபுரிந்த ஊழியர் விபத்தில் மரணம்: விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் என்பதை அறிந்தும் தீ பற்றவைத்த ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்ட பிறகு அந்த தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

தனது முன்னாள் காதலி மற்றொரு ஆடவரை திருமணம் செய்ய போகிறார் என்பதை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் சுரேந்திரன் கண்டுபிடித்தார்.

சுரேந்திரன், மணமகனின் திருமண விழாவிற்கு முன்பு ஏதாவது செய்யவேண்டும் என்று மணமகன் வீட்டின் முன்பக்க வாயிலைப் பூட்டி தீ மூட்டியதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் இரண்டு ஜோடி நைக் காலணிகள் உட்பட அவரின் உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டது, அதன் மொத்த மதிப்பு $410 ஆகும்.

விடுமுறை நாளில் கடலில் குளித்து மகிழ்ச்சியாக இருக்க சென்ற அண்ணன்-தம்பி நீரில் மூழ்கி மரணம்