சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள குளத்தில் சடலம் கண்டெடுப்பு..!

Man's body found in Pang Sua Pond in Bukit Panjang
(PHOTO: Joshua Lee)

சிங்கப்பூர் புக்கிட் பஞ்சாங்கில் உள்ள பாங் சுவா (Pang Sua) குளத்தில் 65 வயது நபர் இன்று (செப்டம்பர் 9) இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று அதிகாலை 5 மணியளவில், 101 புக்கிட் பாஞ்சாங் ரோட்டில் இருந்து அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : தொற்று சூழலை சமாளிப்பதில், இந்திய சமூகத் தலைவர்கள் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றனர் – அமைச்சர் ஈஸ்வரன்..!

அதே நேரத்தில், சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினரும் (SCDF) மீட்பு உதவிக்கான அழைப்பை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமைத் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தவுடன், குளத்தில் எந்த அடையாளமும் தென்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவில் (DART) உள்ள வீரர்கள் நீருக்கடியில் தேடலை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் கரையிலிருந்து 30 மீட்டர் தொலைவில் சடலத்தை மீட்டனர்.

அந்த நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மருத்துவ உதவியாளர்கள் கூறினர். மேலும், அவரின் இறப்பில் சூது ஏதும் இல்லை என்று ஆரம்பக் கட்டப் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் நோய்ப்பரவல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…