திருமணம் முடிக்க மிகுதியானோர் காட்டும் ஆர்வம்! – மண்டபங்களுக்கான கட்டணம் உயரும் என்று அறிவிப்பு!

Photo: Business Insider

சிங்கப்பூரில் பெரும்பாலானோர் திருமணம் செய்து கொள்ள விரும்புவதால் விருந்து நிகழ்ச்சிகளுக்கு மண்டபங்கள் அதிகளவில் முன்பதிவு செய்யப்படுகின்றன.Covid-19 வைரஸ் தொற்று பரவலின் போது பெரும்பாலான சுபநிகழ்ச்சிகளும் தள்ளிவைக்கப்பட்டன அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டுமே முகக்கவசம் போன்ற சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது.

தொற்று குறையத் தொடங்கியதிலிருந்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.அதிலிருந்து மண்டபங்கள் அதிகளவில் தேவைப்பட்டன.அதிகரித்துவரும் பணவீக்கத்தையும் ஊழியர் செலவையும் ஹோட்டல் துறை சமாளித்து வருகிறது.

இந்நிலையைச் சமாளிக்க மண்டபங்களுக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க ஹோட்டல் நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளன.எனவே,எதிர்வரும் ஆண்டில் புதுமணத் தம்பதிகள் விருந்து நநிகழ்ச்சிகளுக்குத் தேவையான மண்டபங்களுக்கு அதிகத் தொகையை கட்டணமாக செலுத்த நேரிடும்.

2024ஆம் ஆண்டு திருமண விழாவுக்கு இப்போதே முன்பதிவு செய்யச் சிலர் விசாரித்து வருவதாகவும் ஹோட்டல்கள் கூறுகின்றன.அதிகரிக்கும் செலவைச் சமாளிக்க மண்டபங்களுக்கான வாடகையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவை குறிப்பிட்டன.