மசாஜ் பார்லர் கடையில் வழங்கப்படும் பாலியல் தொடர்பான சேவைகளை ஏற்றுக்கொண்டு பணம் செலுத்துமாறு இரண்டு ஆடவர்களை
வற்புறுத்தியதால் அவர்கள் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள அந்த மசாஜ் பார்லர் நடத்துனருக்கு S$5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
எல்லைகளை மீண்டும் திறப்பது சிங்கப்பூரின் கடமை; துணை பிரதமர்.!
இந்த சம்பவம் ரங்கூன் சாலையில், சிட்டிகேட் குடியிருப்பில் உள்ள வெஸ்ட் வெல்னஸில் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
19 மற்றும் 21 வயதுடைய அந்த இருவரும் கடந்த ஆண்டு பிப்ரவரி 10 அன்று இரவு சுமார் 10:50 மணியளவில் கடைக்கு சென்றனர்.
அவர்கள் ஒரு மணி நேர உடல் மசாஜுக்கு தலா S$50, மற்றும் கூடுதலாக S$10 நிர்வாகக் கட்டணத்துடன் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு, முழுமையாக ஆடைகளை அவிழ்க்கச் சொன்னதாகவும், ஆனால் அவர்கள் உள்ளாடை மற்றும் ஷார்ட்ஸ் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர், மசாஜ் செய்யும் பெண் ஒருவர் 19 வயது இளைஞரின் அறைக்குள் நுழைந்து, அவரின் அந்தரங்க உறுப்புகளை தொட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு ஆடவர் தொடர்ந்து வேண்டாம் என கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல, மசாஜ் செய்யும் பெண்கள் மேலாடையின்றி இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
தங்குவிடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் 550 பேர் தாக்கப்பட்டுள்ளனர்…