‘வீடியோவை அனுப்புங்கள்…. 10,000 வெள்ளி மதிப்புள்ள வவுச்சர்கள், பரிசுகளை வெல்லுங்கள்’- புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ‘MWC’ அழைப்பு!

Photo: Migrant Workers' Centre Official Facebook Page

சிங்கப்பூருக்கு நிறைய பங்களித்த நம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையிலும், மே தின கொண்டாடட்டங்களின் ஒரு பகுதியாகவும், பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் (Migrant Workers’ Centre- ‘MWC’) ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியானது வரும் மே 29- ஆம் தேதி அன்று இரவு 07.30 PM மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சியில் இந்தியா, வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்று அன்றைய தினம் நடைபெற உள்ளது.

இந்திய ஊழியர் கண்டெய்னர்களுக்கு இடையே சிக்கி மரணம்: கனரக வாகன ஓட்டுநருக்கு சிறை

அதேபோல், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது விருப்பங்கள் மற்றும் வாழ்க்கைக் கனவுகள், வாழ்த்துகள் குறித்து வீடியோவாக எடுத்து 90554109 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். வரும் மே 22- ஆம் தேதிக்குள் வீடியோவை அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் வீடியோவிற்கு 10,000 வெள்ளி மதிப்புள்ள வவுச்சர்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். அத்துடன், பிரம்மாண்ட முறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்படும் வீடியோ ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

எனவே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் இந்த போட்டியில் பங்கேற்பதற்கு இன்றே பதிவு செய்திடுங்கள். 10,000 வெள்ளி மதிப்புள்ள சிங்கப்பூர் வவுச்சர்களை வெல்லுங்கள்!