தஞ்சோங் பகாரில் ஏற்பட்ட விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயதான ஊழியர் வினோத் குமார் உயிரிழந்தார்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது வேலை நடைபெறும் இடத்திற்கு வெளியே ஊழியர் நடைபாதையில் நடந்துகொண்டு இருந்ததாக வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நடைபாதையில் நடந்து கொண்டிருந்த அவருக்கு தெரியாது அது தான் தன் இறுதி பயணம் என்று.
கட்டிடம் இடிந்து விழுந்த பின்னர் ஊழியர் வினோத் காணாமல் போனதாக கூறப்பட்டது, அப்போது மணி பிற்பகல் 2 என்பது குறிப்பிடத்தக்கது.
பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மாலை 6 மணியளவில் அவர் இடிபாடுகளில் சிக்கி இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
அவரின் இறப்புக்கு ஒட்டுமொத்த ஊழியர்களும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர்.
முழு விவரங்கள்:
சாதிப்பதற்காக சிங்கப்பூர் வந்த தமிழ்நாட்டு ஊழியர்; கனவுகளை களைத்த விபத்து… காரணம் என்ன?