“சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு இன்றியமையாது” – தடபுடலாக நடக்கும் ஊழியர்களுக்கு சிறப்பு விருந்து

"சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு இன்றியமையாது" - தடபுடலாக நடக்கும் ஊழியர்களுக்கு சிறப்பு விருந்து
Photo: Migrant Workers' Centre Of Facebook Page

வெளிநாட்டு ஊழியர்களுக்கு புரட்டாசி சிறப்பு மதிய விருந்து வழங்கவுள்ளது குறித்து நாம் தொடர்ந்து பதிவு செய்து வந்தோம்.

MWC புலம்பெயர்ந்த ஊழியர் அமைப்பு மற்றும் இந்து அறக்கட்டளை வாரியம் ஆகியவை இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.

“ராட்சத ராஜநாகம் vs மலைப்பாம்பு”… 7 மணிநேரம் நடந்த சண்டை.. இறுதியில் வென்ற ராஜநாகம் – பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்

சிராங்கூனில் அமைந்துள்ள PGP ஹால் மண்டபத்தில் இன்று 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மதிய விருந்து வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு என்பது இன்றியமையாத ஒன்று, அதனை எண்ணத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் திரளானோர் மண்டபத்துக்கு சென்றுள்ளதாகவும், அதாவது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் இனி தைரியமாக இதை செய்யலாம் – புதிய இயக்கம் தொடக்கம்