வேலையிடங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து புகாரளிக்க ஊழியர்களை ஊக்குவிக்கும் புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு அதற்கான அதிகாரம் அளிக்கும் வகையில் மூன்று மாத புதிய இயக்கமாக இது தொடங்கப்பட்டது.
‘Spot, stop and report’ என அழைக்கப்படும் இந்த இயக்கத்தின் மூலம் பாதுகாப்பு மீறல்கள் குறித்து தைரியமாக புகாரளிக்க தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) ஊக்குவிக்கிறது.
அதே போல பொதுவான வேலையிட அபாயங்கள் குறித்தும் ஊழியர்கள் அறிந்துகொள்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களும் இதனை வரவேற்றுள்ளனர். விபத்துக்கள், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த சூழலில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தான் இந்திய ஊழியர் உட்பட இரு வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்தனர்.
2023 இல் இதுவரை குறைந்தது 18 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
சிக்கன் ரைஸ், கோழி கறி, முட்டை வெறும் S$0.20 மட்டும் – இரு தினங்களுக்கு மட்டுமே ஆஃபர்