காணாமல் போன 11 வயது சிறுமியைக் கண்டுபிடித்த காவல்துறை!

Photo: Singapore Police Force

சிங்கப்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி நூர் நஃப்ஸ்யா நூர் முகமது (Nur Naffasyah Binti Noor Mohamad). இந்த சிறுமி கடந்த 2021- ஆம் ஆண்டு டிசம்பர் 30- ஆம் தேதி பொங்கோல் செட்டில்மெண்ட் (Punggol Settlement) என்ற உணவு, பானக் கடை வளாகத்துக்கு (Food and Beverage Complex) அருகே காணப்பட்டார். அதன் பின்னர், சிறுமி காணவில்லை.

சிங்கப்பூரில் குளுகுளு குளுமையுடன் தொடங்கிய புத்தாண்டு… வெப்பநிலை 23°C குறையும்!

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு, சிறுமியை யாரேனும் பார்த்தால் உடனடியாக காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன், சிறுமி கடைசியாக காணப்பட்ட பொங்கோல் செட்டில்மெண்ட் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று (03/01/2022) இரவு 08.48 PM மணிக்கு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காணாமல் போன 11 வயது சிறுமியை காவல்துறை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகன சந்தையில் நுழைந்துள்ள சிங்கப்பூரர்!

எனினும், சிறுமி எப்போது, எங்கு கண்டுபிடிக்கப்பட்டார், சிறுமியின் உடல்நிலை உள்ளிட்ட எந்தவொரு விவரங்களையும் காவல்துறை தெரிவிக்கவில்லை.

சிறுமியைக் கண்டுபிடித்த காவல்துறையினருக்கு, பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.