சிங்கப்பூரில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக 17 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.
கடந்த ஏப். 18 ஆம் தேதி முதல் காணாமற்போன சிறுமி நூர் எலிஷா அண்டி ஜோஹன் (Nur Elysha Andi Johan) எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல் கோரி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளதாக CNA தெரிவித்துள்ளது.
அவர் கடைசியாக கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி Simei Avenue வில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.