சிங்கப்பூரில் காணாமல் போன 21 வயதுமிக்க மலாய் ஆடவர் குறித்து போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடைசியாக கடந்த ஜூலை 21 ஆம் தேதி, 463 ஜூரோங் வெஸ்ட் செயின்ட் 41 அருகே அவர் காணப்பட்டார் என்று SPF தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 100 பேர் கைது
மேலும், அவர் அடர் பச்சை நிற டி-சர்ட், கருப்பு ஷார்ட்ஸ் மற்றும் செருப்பு அணிந்து இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
#sgpoliceappeal Missing 21-year-old male Malay, last seen at the vicinity of 463 Jurong West St 41 on 21 July 2022, 0001hrs. Wearing a dark green T-shirt, black shorts, with slippers. If found, please call 999. pic.twitter.com/j3J0BZBNEC
— Singapore Police Force (@SingaporePolice) July 22, 2022
பொதுமக்கள் யாரேனும் அவரை கண்டால் 999 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கூடுதலாக தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
உயிரிழப்பை ஏற்படுத்திய ஓட்டுநர்; சிறையில் அடைத்த சிங்கப்பூர் – 8 ஆண்டுகள் தடை