சிங்கப்பூரில் 11 வயது வெளிநாட்டு சிறுமியை 3 நாட்களாக காணவில்லை

missing police looking
Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூரில் 11 வயது சிறுமியை 3 நாட்களாக காணவில்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த செப்.16 ஆம் தேதி, மதியம் 12.00 மணி முதல் சிறுமியை காணவில்லை என சொல்லப்பட்டுள்ளது.

கோவிலில் பெண்ணை அறைந்து, இழிவாக பேசி.. ஆடவர் ஒருவரை தமிழில் மோசமாக திட்டிய இந்தியர்

அவர் மலேசியாவை சேர்ந்த பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் கடைசியாக ஹௌகாங் செயின்ட் 61 க்கு அருகில் காணப்பட்டார்.

பழுப்பு நிற நீண்ட கை சட்டை மற்றும் கருப்பு நிற பேன்ட் அணிந்திருந்தார் என்றும் போலீசார் பதிவிட்டுள்ளனர்.

 

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கலாம்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறியுள்ளனர்.

சாங்கி விமான நிலையத்தில் இனி பாஸ்போர்ட் கிடையாது.. 2024 முதல் “டோக்கன்” தான்