சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள இந்து கோவிலில் பெண் ஒருவரின் கன்னத்தில் அறைந்ததாக இந்தியர் சிக்கியுள்ளார்.
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞரான 54 வயதான ரவி மாடசாமி என்று அழைக்கப்படும் எம். ரவி மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
“சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று இதை செய்யாதீங்க” – சிக்கிய சிவகங்கை ஊழியர் மீது வழக்கு பதிவு
ஒன்று தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக, மற்றொன்று பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ்.இரண்டு குற்றச்சாட்டுகளும் அதில் அடங்கும்.
ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் 12 மணியளவில் அவர் அந்தப் பெண்ணை அறைந்ததாகக் கூறப்படுகிறது.
அதோடு நிறுத்திவிடாமல் அநாகரீகமான வார்த்தைகளால் கத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கோவிலுக்கு வந்த மற்றொரு பெண்ணை விபச்சாரி என்று கூறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
முன்னதாக, காலை 11 மணியளவில், பகோடா ஸ்ட்ரீட்டில் உள்ள ஒருவரைத் தமிழில் தகாத வார்த்தைகள் சொல்லி கத்தியதாகவும் கூறப்படுகிறது.
ரவி, மருத்துவப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் காவலில் சனிக்கிழமை வைக்கப்பட்டார்.
மேலும் வரும் செப்டம்பர் 29 அன்று நீதிமன்றத்திற்குத் கொண்டு வரப்படுவார்.