உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் கடந்த திங்கள்கிழமை (ஏப். 18) அன்று பெண்மணி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக 40 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அன்று மாலை 4.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்தனர்.
தவறான உறவு கொண்டதாக வெளிநாட்டவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, 3 பிரம்படி!
இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட தீவீர விசாரணைகள் மற்றும் கேமராக்களின் உதவியுடன், உட்லண்ட்ஸ் போலீஸ் பிரிவின் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர்.
மானபங்கம் தொடர்பான இந்த குற்றத்திற்காக இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அந்த ஆடவர் மீது குற்றம் சாட்டப்படும்.
இது போன்ற குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும்/அல்லது பிரம்படி மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படும்.
சமூக பாதுகாப்பை அச்சுறுத்தும் இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்டப்படாது என்று கூறிய காவல்துறை, “குற்றவாளிகள் சட்டத்தின்படி கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றும் கூறியது.
சிங்கப்பூரில் காணாமல் போயிருந்த சிறுமி பத்திரமாக கிடைத்தார் – பகிர்ந்த Micset வாசகர்களுக்கு நன்றி!