உட்லண்ட்ஸில் பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாக 55 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்கிழமை (செப்டம்பர் 13) காலை 6.50 மணியளவில் வுட்குரோவ் அவென்யூவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெண்ணிடம் தன் பிறப்புறுப்பை வெளிக்காட்டிய 36 வயதுமிக்க ஊழியர் கைது
அதில் முன்பின் அறியாத ஆடவர் ஒருவரால் பெண் மானபங்கம் செய்யப்பட்டதாக போலீசாருக்கு புகார் கிடைத்தது.
அதன் பின்னர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது, அதாவது புகார் கிடைத்த எட்டு மணி நேரத்திற்குள் போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில், அவர் மீது நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், அல்லது பிரம்படி அல்லது அத்தகைய தண்டனைகள் கலவையாகவும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் இனி வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை – குடையுடன் தயாராக இருங்கள்