மாதாந்திர கார்த்திகையையொட்டி, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் சிறப்பு பூஜை!

மாதாந்திர கார்த்திகையையொட்டி, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் சிறப்பு பூஜை!
Photo: STT

 

மாதாந்திர கார்த்திகையையொட்டி, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயிலில் (Sri Thendayuthapani Temple) சிறப்பு பூஜை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வேலை அனுமதிக்கான தகுதிச் சம்பளம் அதிகரிப்பு.. “எப்படி சமாளிப்போம்” – சிறிய நிறுவனங்கள் கவலை

சிங்கப்பூரில் உள்ள டேங்க் ரோட்டில் (Tank Road) அமைந்துள்ளது ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயில். மாதாந்திர கார்த்திகையையொட்டி, இக்கோயிலில் இன்று (மார்ச் 15) சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இன்று மாலை 07.00 மணிக்கு தெண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்படவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் கோயில் வளாகத்தில் ஊர்வலமாக வரும் தெண்டாயுதபாணி முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எகிறிய வேலைவாய்ப்பு… கட்டுமானம், உற்பத்தி துறைகளில் அதிக தேவை

இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.