பாலியியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் 17 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்: இருவருக்கு மரண தண்டனை – சட்டம் அனைவருக்கும் சமம்
ஜூன் 12 மற்றும் கடந்த திங்கட்கிழமைக்கு இடையில், குற்றப் புலனாய்வுத் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
வணிக வளாகங்கள், மசாஜ் நிறுவனங்கள், அழகு நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு வீடுகள் ஆகிய இடங்களிலும் அதிரடி சோதனை நடந்தது.
கைது செய்யப்பட்ட 212 பேரில், 207 பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் அடங்குவர்.
பாலியல் சேவை செய்ய ஒரு பெண்ணை வாங்கியதாக 41 வயதான சிங்கப்பூர் ஆடவர் மீது கடந்த ஜூலை 19 அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கைது செய்யப்பட்ட மற்ற அனைவரிடமும் விசாரணைகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதலான போனஸ் – ஆகஸ்ட் மாதமே வழங்கப்படும்