மோட்டார் சைக்கிள்-கார் விபத்து: நேரில் கண்ட சாட்சியை தேடும் குடும்பம்

motorcycle-accident
Siti Aoki/FB

சிங்கப்பூர், தெம்பனீஸ் அதிவிரைவு சாலை (TPE) வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தின் புகைப்படங்களை மோட்டார் சைக்கிள் ஓட்டியவரின் உறவினர் என்று கூறிக்கொள்ளும் பெண் ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

ஊழியர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 235 மினிபேருந்துகள்: முன்பதிவு செய்ய நிறுவனங்கள் முன்வருமா?

புகைப்படங்களின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவரின் கை மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு துணை மருத்துவர்கள் உதவி செய்வதையும் காண முடிகிறது.

சாட்சி

இந்நிலையில், முகநூல் பதிவில் கண்ணால் பார்த்த சாட்சியை கேட்டு ஒரு முறையீடும் இருந்தது.

அதேபோல், Roads.sg என்ற பேஸ்புக் குழுவும், சாட்சிகள் முன்வருமாறு கோரி பதிவை பகிர்ந்துள்ளது.

போலீஸ் விசாரணை

கடந்த நவம்பர் 18ஆம் தேதி மதியம் 12:33 மணியளவில் சிலேத்தர் அதிவிரைவு சாலை (SLE) நோக்கி TPE வழியாக ஏற்பட்ட விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அந்த 21 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவுடன் இருந்தார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

வணிக ரீதியான பயணிகள் விமானங்கள்… இந்தியாவுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை