அப்பர் அல்ஜூனிட் சாலை மற்றும் Bidadari Park டிரைவ் சந்திப்பில் ஏற்பட்ட விபத்தில் 46 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ டெலிகிராம் குழுவில் வெளியானது.
இந்த விபத்து குறித்து செப். 11 அன்று இரவு 8:14 மணிக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் போலீஸ் படை கூறியது.
விபத்தை அடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
38 வயதுடைய கார் ஓட்டுநர் விசாரணையில் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.