பெடோக் நார்த் சாலையில் வேன், லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிக்கிய ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஜூலை 16 அன்று பிற்பகல் நடந்தது, இறந்தவர் 38 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆவார்.
இந்த மோசமான விபத்தின் காட்சிகள் TikTok வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேன் மோதியதில் கீழே விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை பின்னால் வந்த லாரி சுமார் 30 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றது என்ன கூறப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தெம்பனீஸ் அவென்யூ 10 நோக்கி செல்லும் பெடோக் நார்த் சாலையில் வேன், லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக சிங்கப்பூர் போலீஸ் படைக்கு தகவல் கிடைத்தது.
இதில் ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்