துவாஸில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 51 வயதான ஆடவர் மரணம்

tuas-south-avenue-accident-fatal-motorcycle
SgRoadsaccidentcom Facebook

துவாஸ் சவுத் அவென்யூ 3 இல் வாகனம் சறுக்கியதாகக் கூறப்படும் விபத்தில் சிக்கி 51 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து நேற்று ஜன.24 அன்று புதன்கிழமை காலை 7.45 மணியளவில் தங்களுக்கு புகார் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா.. பயணியிடம் சிக்கிய ரூ.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்

ஜாலான் அகமது இப்ராகிம் நோக்கி செல்லும் வழியில் துவாஸ் சவுத் அவென்யூ 3 இல் சென்ற அந்த மோட்டார் சைக்கிள் தானாக சறுக்கி விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வீரர் ஒருவர் உறுதி செய்து அறிவித்தார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

லிட்டில் இந்தியாவில் பெண்ணை மானபங்கம் செய்த இளைஞர்.. மொத்தம் 11 ஆண்கள் மீது குற்றச்சாட்டு