பாட்டாளி கட்சியின் முக்கிய நிர்வாகியும், செங்காங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜேமஸ் லிம் (Sengkang GRC MP Jamus Lim), ஏப்ரல் 25- ஆம் தேதி அன்று மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்காங் பகுதியை நல்ல நிலையில் வைத்திருக்க உதவிய தூய்மைப் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில், சிக்கன் பிரியாணியை வழங்கினார்.
‘Causeway Link’ பேருந்து நிறுத்துமிடம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என அறிவிப்பு!
பிறருக்கு உணவளிப்பதன் மூலம் நன்றி தெரிவிக்கும் பண்பைத் தாயாரிடம் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்ட ஜேமஸ் லிம், நோன்புப் பெருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். அனைவரும் ஒன்று சேர்ந்த உணவருந்த இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.
போதைப்பொருள் கடத்திய வழக்கில் சிங்கப்பூர் தமிழர் தங்கராஜு சுப்பையா தூக்கிலிடப்பட்டார்!
சிக்கன் பிரியாணியைப் பெற்றுக் கொண்ட அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினருடன் குழு புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர். அத்துடன், ஊழியர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் கலந்துரையாடினார்.