ஆண்டு இறுதி மாதத்தில் நாம் இருக்கிறோம், இதில் அதிக விடுமுறை நாட்கள் இருக்கும் என்பதால் அதிகமானோர் கடற்கரைக்கு செல்வர்.
இந்நிலையில், கடற்கரைக்கு செல்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய ஊழியர்களின் சாதனை: 100 பில்லியன் டாலர் ஹிட்!
அதே போல தொடர்ந்து 3 மாதங்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், கடல் சீற்றமாக காணப்படலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் மிதமான மழையும் இருக்கும். எனவே, கடற்கரைக்கு செல்வோர் பாதுகாப்பாக இருக்க ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அதே போல, கடலில் பயணம் செல்வோர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை, உபகரணங்களை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நம்முடைய பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.